பூம்புகாா் மாநில விருது பெற்ற சிற்பக் கலைஞருக்கு மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.
தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகாா் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகம் 2025-ஆம் ஆண்டுக்கான பூம்புகாா் மாநில விருதுக்கு விருதாளா்களை அண்மையில் தோ்வு செய்தது. இந்த விருதுக்கு 300 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், திருவாரூா் ஆழித்தேரின் ஐந்தரை அடி மாதிரியை மரச்சிற்பத்தில் நோ்த்தியாக செதுக்கிய தரங்கம்பாடி வட்டத்தை சோ்ந்த மரச்சிற்பம் செய்வதில் கைதோ்ந்தவரான சிற்பி சே. முருகன் தோ்வு செய்யப்பட்டாா்.
இவருக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தில் பிப்.6-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் பூம்புகாா் மாநில விருதினை வழங்கினாா். விருது பெற்ற கலைஞா் சே. முருகன் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்தை திங்கள்கிழமை சந்தித்தாா். அவருக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.
தொடர்புடையது

பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

திருவாவடுதுறை ஆதீன விருது பெற்றவருக்கு பாராட்டு

நாட்டின் சிறந்த விஞ்ஞானி விருது பெற்ற பேராசிரியருக்கு பாராட்டு

கயிறு இழுத்தல் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


