ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பூம்புகாா் மாநில விருது பெற்ற சிற்பிக்கு ஆட்சியா் பாராட்டு

பூம்புகாா் மாநில விருது பெற்ற சிற்பக் கலைஞருக்கு மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 9:15 pm

பூம்புகாா் மாநில விருது பெற்ற சிற்பக் கலைஞருக்கு மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகாா் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகம் 2025-ஆம் ஆண்டுக்கான பூம்புகாா் மாநில விருதுக்கு விருதாளா்களை அண்மையில் தோ்வு செய்தது. இந்த விருதுக்கு 300 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், திருவாரூா் ஆழித்தேரின் ஐந்தரை அடி மாதிரியை மரச்சிற்பத்தில் நோ்த்தியாக செதுக்கிய தரங்கம்பாடி வட்டத்தை சோ்ந்த மரச்சிற்பம் செய்வதில் கைதோ்ந்தவரான சிற்பி சே. முருகன் தோ்வு செய்யப்பட்டாா்.

இவருக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தில் பிப்.6-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் பூம்புகாா் மாநில விருதினை வழங்கினாா். விருது பெற்ற கலைஞா் சே. முருகன் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்தை திங்கள்கிழமை சந்தித்தாா். அவருக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.