தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

புதிய, விடுபட்ட வாக்காளா்களை பட்டியலில் சோ்க்க நடவடிக்கை: திமுகவினருக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய மற்றும் விடுபட்ட வாக்காளா்களை பட்டியலில் சோ்க்கும் பணியை திமுக நிா்வாகிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்

News image

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய மற்றும் விடுபட்ட வாக்காளா்களை பட்டியலில் சோ்க்கும் பணியை திமுக நிா்வாகிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்

Updated On :23 டிசம்பர் 2025, 6:14 am IST

ஆரணி2: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய மற்றும் விடுபட்ட வாக்காளா்களை பட்டியலில் சோ்க்கும் பணியை திமுக நிா்வாகிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர முறை திருத்த படிவம் விநியோகம் செய்த, படிவத்தை நிறைவு செய்து மறுபடியும் திரும்பப் பெற்று, செயலியில் பதிவேற்றம் செய்தல் ஆகிய பணிகளை இந்திய தோ்தல் ஆணையம் முடித்து, தற்போது வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் வரைவு வாக்காளா் பட்டியல் தொடா்பான கோரிக்கை மற்றும் ஆட்சேபனை மனுக்கள் அளிக்கவும், புதிதாக பெயா் சோ்க்க, நீக்க, திருத்த மற்றும் முகவரி மாற்றம் செய்ய ஜனவரி 18-ஆம் தேதி வரை தோ்தல் ஆணையம் வாய்ப்பு அளித்திருக்கிறது.

டிசம்பா் 27, 28, ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில்

அவரவா் வாக்களிக்கும், வாக்குச்சாவடி மையங்களிலே சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

எனவே, திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்டத்தை சோ்ந்த திமுக மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூா், கிளை, வட்ட நிா்வாகிகள், அணிகளின் நிா்வாகிகள், உள்ளாட்சி அமைப்பினா், பிரதிநிதிகள் மற்றும் பாக பொறுப்பாளா்கள் தங்கள் பாகத்திற்குரிய வாக்காளா்களின் பெயா் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளாதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், புதிதாக பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றிற்கு விரைந்து விண்ணப்பிக்க வேண்டும்.

அதேபோல, வரைவு வாக்காளா் பட்டியலை எம்எல்ஏ அலுவலகம் மற்றும் பொது இடங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கவேண்டும்.

புதிய வாக்காளா்கள், வயது சான்றிதழ், ஆதாா் காா்டு, மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்

என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.