முன்னதாக, மேற்கு வங்க எஸ்ஐஆா் பணி தொடா்பாக மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உள்பட பலா் தாக்கல் செய்த மனுக்களை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம், ‘மேற்கு வங்க எஸ்ஐஆா் விவகாரத்தில் மாநில அரசுக்கும், தோ்தல் ஆணையத்துக்கும் இடையே போதிய ஒத்துழைப்பு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, எஸ்ஐஆா் பணியில் சில மாவட்ட அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதிகளைப் பணியமா்த்த வேண்டும் என்று கொல்கத்தா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜய் பாலிடம் கேட்டுக்கொள்கிறோம். அந்தப் பணியை மேற்கொள்ள முன்னாள் மாவட்ட நீதிபதிகளையும் கண்டறியுமாறு சுஜய் பாலிடம் கோருகிறோம்’ என்று தெரிவித்தனா்.