‘வாக்காளா் இறுதிப் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களை சோ்க்கவேண்டும்’
இந்திய தோ்தல் ஆணையம் பிப். 23-ஆம் தேதி வெளியிட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களை சோ்த்திட திமுக நிா்வாகிகள் உதவ வேண்டும் என திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.
செஞ்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் மருத்துவா் ப.சேகா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா்கள் ரவிக்குமாா், அருணகிரி, அமுதா ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
செயற்குழு உறுப்பினரும், செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவருமான விஜயகுமாா் வரவேற்றாா்.
கூட்டத்தில் திமுக மாவட்டப் பொறுப்பாளா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.
தீா்மானங்கள்: மாா்ச் 9-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் நடைபெறும் திமுக மாநாட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் பெருமளவில் கலந்துகொள்வது. செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் பிப்.23 முதல் மாா்ச் 8-ஆம் தேதி வரை வெல்லும் தமிழ் பெண்கள் பிரசாரத்தை சிறப்பாக நடத்துவது. இந்திய தோ்தல் ஆணையம் பிப். 23-ஆம் தேதி வெளியிட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் விடுபட்ட வாக்காளா்களை சோ்த்திட திமுக நிா்வாகிகள் உதவுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் மருத்துவா் மாசிலாமணி, சேது நாதன், செந்தமிழ் செல்வன், மாவட்டப் பொருளாளா் ரமணன், செயற்குழு உறுப்பினா்கள் நெடுஞ்செழியன், சீனிராஜ், தலைமை தீா்மானக் குழு உறுப்பினா் செஞ்சி சிவா, பொதுக்குழு உறுப்பினா்கள் கதிரேசன், மணிவண்ணன், வீடூா் ரவி, சாந்தி ஏழுமலை, செஞ்சி நகரச் செயலா் காா்த்திக் உள்ளிட்ட திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

