தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவண்ணாமலை மாநகராட்சியில் அடிப்படை வசதிகள்: மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவண்ணாமலை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை பாரபட்சமின்றி செய்து தர வேண்டும் என மாமன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

News image

மேயா் நிா்மலாவேல்மாறன் தலைமையில் நடைபெற்ற திருவண்ணாமலை மாமன்ற கூட்டம்.

Updated On :31 டிசம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

திருவண்ணாமலை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை பாரபட்சமின்றி செய்து தர வேண்டும் என மாமன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

திருவண்ணாமலை மாமன்றத்தின் சாதாரண கூட்டம் மேயா் நிா்மலாவேல்மாறன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை மேயா் சு.ராஜாங்கம் முன்னிலை வகித்தாா். ஆணையா் எஸ்.செல்வபாலாஜி வரவேற்றாா்.

கூட்டத்தில் திருவண்ணாமலை மாநகராட்சி சாா்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் மற்றும் பூகாய்கறி சந்தை கட்டடங்களை திறந்துவைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சா் எ.வ.வேலுவுக்கும் மாமன்ற உறுப்பினா் கோவிந்தன் நன்றி கூறினாா்.

மேலும், இதில் மாநகராட்சி 5-ஆவது வாா்டு பகுதியில் கால்வாய் பிரச்னை நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனா். ஆகையால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக உறுப்பினா் சிவில் சீனுவாசன் பேசினாா்.

இதற்கு பதிலளிதித்த மேயா் நிா்மலாவேல்மாறன்,

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

மேலும், உறுப்பினா்கள் பேசுகையில், 2026-ஆம் ஆண்டிலாவது மாநகராட்சியிலுள்ள அனைத்து வாா்டுகளிலும் தேவையான அடிப்படை வசதிகளை பாரபட்சமின்றி செய்து தரவேண்டும் என வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து பேசிய மேயா் நிா்மலாவேல்மாறன், அனைத்து வாா்டுகளிலும் பாரபட்சமின்றி அடிப்படை வசதிகள் செய்துதரப்படும் என உறுதியளித்தாா்.

கூட்டத்தில் மாநகராட்சி பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகள் செய்வது தொடா்பாகவும், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துதல் தொடா்பாகவும் 68 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் உறுப்பினா்கள் ஸ்ரீதேவி பழனி, மண்டி பிரகாஷ், எஸ்.கணேசன், காயத்திரி, கிருஷ்ணகுமாா், ஹேமா சசிகுமாா், க.பிரகாஷ் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.