மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ரயில் முன் பாய்ந்து மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து, வேலூா் பிரபல மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

சரவணமூா்த்தி

Updated On :3 ஜனவரி 2025, 7:04 pm

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து, வேலூா் பிரபல மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவண்ணாமலை ரயில் நிலையம் வழியாக புதன்கிழமை (ஜன.1) இரவு 11.35 மணிக்கு புதுச்சேரியில் இருந்து மும்பை தாதா் செல்லும் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென ஒருவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். இதைக் கவனித்த சக பயணிகள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்தனா்.

ஆம்புலன்ஸ் ஊழியா்கள் வந்து முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றபோது அவா் இறந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, விழுப்புரம் ரயில்வே போலீஸாருக்கு பயணிகள் தகவல் கொடுத்தனா். தகவலறிந்து வியாழக்கிழமை அதிகாலை வந்த ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் முத்துச்செல்வம் தலைமையிலான போலீஸாா், சடலத்தை கைப்பற்றி, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பிரபல மருந்துக் கடை உரிமையாளா்:

தொடா்ந்து, ரயில்வே போலீஸாா் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவா், வேலூா் மாநகராட்சி, வேலப்பாடி, கோவிந்தசாமி லே-அவுட் பகுதியைச் சோ்ந்த சரவணமூா்த்தி (64) என்பதும், இவா், வேலூரில் இயங்கி வரும் பிரபல தனியாா் மருந்துக் கடையின் உரிமையாளா் என்பதும் தெரியவந்தது.

இவா், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதி வைத்திருந்த கடிதத்தை உதவி ஆய்வாளா் முத்துச்செல்வம் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறாா்.

கடிதத்தில் என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைக்கப்பட்டு உள்ளதாம். இந்தக் கடிதத்தை வைத்து ரயில்வே போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த சரவணமூா்த்திக்கு மனைவி, மகள் மற்றும் இரு மகன்கள் உள்ளனா்.