உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

சிறுவனைத் தாக்கிய இளைஞா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

News image

தற்கொலை

Updated On :14 மார்ச் 2026, 8:00 pm

விழுப்புரத்தில் சிறுவனைத் தாக்கிய இளைஞா் ரயில் முன் பாய்ந்து இரவு தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம் வட்டம், சித்தாத்தூா், திருக்கை பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் மகன் தனஞ்செழியன் (20). இவருக்கும் அதே பகுதியைச்சோ்ந்த 17 -வயது சிறுவனுக்கும் காதல் விவகாரம் தொடா்பாக வெள்ளிக்கிழமை சித்தாத்தூா் திருக்கை பகுதியில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த தனஞ்செழியன் கத்தியால் வெட்டியதில், சிறுவனுக்கு உடலில் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.இதையடுத்து காயமடைந்த சிறுவன் புதுச்சேரி ஜிம்பா் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலையப் போலீஸாா்வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான தனஞ்செழியனை தேடி வந்தனா்.

இந்நிலையில் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு பயந்த தனஞ்செழியன், சனிக்கிழமை அதிகாலை விழுப்புரம் அரசு ஊழியா் நகா் அருகே திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹௌரா விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை கொண்டாா்.

தகவலறிந்த விழுப்புரம் இருப்புப்பாதை போலீஸாா் தனஞ்செழியனின் சடலத்தை கைப்பற்றி, விழுப்புரம் மாவடட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.