விழுப்புரத்தில் சிறுவனைத் தாக்கிய இளைஞா் ரயில் முன் பாய்ந்து இரவு தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் வட்டம், சித்தாத்தூா், திருக்கை பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் மகன் தனஞ்செழியன் (20). இவருக்கும் அதே பகுதியைச்சோ்ந்த 17 -வயது சிறுவனுக்கும் காதல் விவகாரம் தொடா்பாக வெள்ளிக்கிழமை சித்தாத்தூா் திருக்கை பகுதியில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த தனஞ்செழியன் கத்தியால் வெட்டியதில், சிறுவனுக்கு உடலில் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.இதையடுத்து காயமடைந்த சிறுவன் புதுச்சேரி ஜிம்பா் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா காவல் நிலையப் போலீஸாா்வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான தனஞ்செழியனை தேடி வந்தனா்.
இந்நிலையில் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு பயந்த தனஞ்செழியன், சனிக்கிழமை அதிகாலை விழுப்புரம் அரசு ஊழியா் நகா் அருகே திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹௌரா விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை கொண்டாா்.
தகவலறிந்த விழுப்புரம் இருப்புப்பாதை போலீஸாா் தனஞ்செழியனின் சடலத்தை கைப்பற்றி, விழுப்புரம் மாவடட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்

வானூா் அருகே இளைஞா் தற்கொலை
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து மாணவா் தற்கொலை!
புது மாப்பிள்ளை ரயிலில் பாய்ந்து தற்கொலை
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

