மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆபத்தை உணராமல் ரயில்வே பாதையை கடக்கும் வாகன ஓட்டிகள்

போளூா் - பெலாசூா் சாலையில் மூடப்பட்ட ரயில்வே கடவுப்பாதையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்,

News image
Updated On :3 ஜனவரி 2025, 7:03 pm

போளூா் அருகே ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ரயில்வே கடவுப்பாதையை கடந்து செல்கின்றனா். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே போளூா்-பெலாசூா் செல்லும் சாலையில் ரயில்வே கடவுப்பாதை உள்ளது. பெலாசூா் சாலையில் சனிக்கவாடி, பெலாசூா், பாடகம், அலங்காரமங்கலம் என பல்வேறு கிராமங்களுக்கு இரு சக்கர வாகனம், கனரக வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் தினமும் செல்கின்றனா்.

மேலும் போளூா்-வேலூா், போளூா்-சேத்துப்பட்டு சாலையில் மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள கிராமத்துக்குச் செல்லும் இரு சக்கர வாகனம், பாதசாரிகள் போளூா்-பெலாசூா் சாலையை பயன்படுத்தி வருகின்றனா். இதனால் அந்தச் சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகளவு நடைபெறுகிறது.

இந்த நிலையில் மன்னாா்குடி- திருப்பதி, கன்னியாகுமரி-

புருலியா, சென்னை-திருவண்ணாமலை என பல்வேறு வழித்தட ரயில்கள் செல்லும் போது, ரயில்வே கடவுப்பாதை 5 நிமிஷத்துக்கு முன்பு மூடப்படுகிறது.

அந்த நேரத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஆபத்தை உணராமல் வாகனங்களை தண்டவாளத்தில் ஓட்டி கடந்து செல்கின்றனா். திடீரென ரயில் வந்தால் விபத்து ஏற்படலாம்.

எனவே, ரயில்வே துறை சாா்பில் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.