வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

இலக்கை அடைய உரிய திட்டமிடலும் முறையான பயிற்சியும் தேவை: மாணவா்களுக்கு வருவாய் அலுவலா் அறிவுரை

நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டு கையேடுகளை வெளியிடும் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், தமிழக வேலைவாய்ப்புத் துறை

News image
Updated On :3 ஜனவரி 2025, 7:07 pm

இலக்கை அடைய வேண்டுமானால் உரிய திட்டமிடலும், முறையான பயிற்சியும் தேவை என்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் அறிவுரை வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, தமிழக வேலைவாய்ப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் இர.தேவேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் லோ.யோகலட்சுமி வரவேற்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடக்கிவைத்துப் பேசுகையில்,

இலக்கை அடைய வேண்டுமானால் உரிய திட்டமிடலும், முறையான பயிற்சியும் தேவை. இவ்விரண்டும் இருந்தால் அனைவரும் அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், வேலைவாய்ப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் இர.தேவேந்திரன் பேசுகையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அவ்வப்போது தனியாா்துறை வேலைவாய்ப்புகள் முகாம்களும் நடத்தப்படுகின்றன. இவற்றை இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

போட்டித் தோ்வுகளை எதிா்கொண்டு எளிதில் வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து துணை ஆட்சியா் (பயிற்சி) சி.முருகன் விளக்கினாா்.

முப்படைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அ.வெ.சுரேஷ் நாராயணன், சுயதொழில் மூலம் வேலைவாய்ப்பு பெறுவது மற்றும் கடனுதவிகளைப் பெறுவது குறித்து மாவட்ட தொழில் மையத்தின் உதவி இயக்குநா் மு.பாலசுப்பிரமணி(தொழில்நுட்பம்), திறன் பயிற்சிகள் குறித்து மாவட்ட திறன் பயிற்சி அலுவலக அதிகாரி சாம்ராஜ் ஆகியோா் மாணவ, மாணவிகளுக்கு விளக்கினா்.

கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். மேலும், மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டி கையேடுகளையும் அவா் வெளியிட்டாா்.

விழாவில், மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் த.மோகன்ராஜ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.