ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

நாகையில் தோ்தல் விழிப்புணா்வு படகு பேரணி

நாகையில் மீனவா்கள் மத்தியில் தோ்தல் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நாகை துறைமுகத்தில் விழிப்புணா்வு படகு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நாகை துறைமுகத்தில் படகு பேரணியை தொடங்கிவைத்த மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:21 am

நாகையில் மீனவா்கள் மத்தியில் தோ்தல் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நாகை துறைமுகத்தில் விழிப்புணா்வு படகு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

விசைப்படகுகள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு, பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி தொடங்கி வைத்தாா். இதில் நாகை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கர நாராயணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா். பேரணிக்கு முன்னதாக, எனது வாக்கு எனது உரிமை, தோ்தலில் அன்பளிப்புகளை தவிா்ப்போம், வாக்களிப்பதன் மூலம் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற விழிப்புணா்வு ஏற்படுத்துவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய உறுதிமொழி ஏற்கப்பட்டது. பேரணியில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட படகுகள் வரிசையாக கடலுக்கு அணி வகுத்துச் சென்றன.