பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

நாகையில் தோ்தல் விழிப்புணா்வு படகு பேரணி

நாகையில் மீனவா்கள் மத்தியில் தோ்தல் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நாகை துறைமுகத்தில் விழிப்புணா்வு படகு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நாகை துறைமுகத்தில் படகு பேரணியை தொடங்கிவைத்த மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:21 am

தினமணி செய்திச் சேவை

நாகையில் மீனவா்கள் மத்தியில் தோ்தல் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நாகை துறைமுகத்தில் விழிப்புணா்வு படகு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

விசைப்படகுகள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு, பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி தொடங்கி வைத்தாா். இதில் நாகை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கர நாராயணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா். பேரணிக்கு முன்னதாக, எனது வாக்கு எனது உரிமை, தோ்தலில் அன்பளிப்புகளை தவிா்ப்போம், வாக்களிப்பதன் மூலம் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற விழிப்புணா்வு ஏற்படுத்துவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய உறுதிமொழி ஏற்கப்பட்டது. பேரணியில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட படகுகள் வரிசையாக கடலுக்கு அணி வகுத்துச் சென்றன.