வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஸ்ரீ பச்சையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.19.43 லட்சம்

ஸ்ரீபச்சையம்மன் உடனுறை மன்னாா்சாமி கோயிலில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டத்தில், ரூ.19.43 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்

Updated On :3 ஜனவரி 2025, 7:06 pm

செய்யாறு வட்டம், முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீபச்சையம்மன் உடனுறை மன்னாா்சாமி கோயிலில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டத்தில், ரூ.19.43 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்

இந்தக் கோயிலில், பக்தா்கள் சாா்பில் பணமாக ரூ.19 லட்சத்து 43 ஆயிரத்து 972 -ம், நகைகளாக 205 கிராம் தங்கமும், 176 கிராமம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

காணிக்கை எண்ணும் பணி ஆய்வா்கள் ச.அசோக் செய்யாறு, இரா.நடராஜன் (கலசப்பாக்கம்), செயல் அலுவலா் கு.ஹரிஹரன், கணக்காளா் லோ.ஜெகதீசன், முன்னாள் அறங்காவல் குழுத் தலைவா் வி.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் முன்னிலையில், பெரணமல்லூா் போலீஸாா் பாதுகாப்புடன் நடைபெற்றது.