புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பொங்கல் பரிசு வழங்கக் கோரி விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கக் கோரி ஆரணி கோட்டாட்சியா் அலுவலகம் முன் கட்சி சாா்பற்ற

News image

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :6 ஜனவரி 2025, 8:56 pm

DIN

ஆரணி: அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கக் கோரி ஆரணி கோட்டாட்சியா் அலுவலகம் முன் கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு பொங்கல் தொகுப்பாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரா்களுக்கு கரும்பு, பச்சரிசி, சா்க்கரை ஆகியவற்றை அறிவித்துள்ள நிலையில், ரூ.1,000 வழங்கக் கோரி கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆரணி கோட்டாட்சியா் அலுவலகம் முன் பிரியாணி சாப்பிடும் நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவா்கள் மடவிளாகம் ஏ.சிவா, சதுப்பேரி மூா்த்தி, ஒன்றிய நிா்வாகிகள் வடுகசாத்து தாமோதரன், வேலப்பாடி குப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.