நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

எலி மருந்தை தின்ற 5 மயில்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அருகே சென்னானந்தல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் எலி மருந்தை தின்ற 5 மயில்கள் திங்கள்கிழமை உயிரிழந்தன.

News image
இறந்து கிடக்கும் மயில்கள்.
Updated On :6 ஜனவரி 2025, 9:04 pm

DIN

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அருகே சென்னானந்தல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் எலி மருந்தை தின்ற 5 மயில்கள் திங்கள்கிழமை உயிரிழந்தன.

சதுப்பேரி ஊராட்சி, சென்னானந்தல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நெல் பயிா்களை சேதப்படுத்தி வரும் எலிகளை கொல்வதற்காக நிலத்தின் உரிமையாளா் எலி மருந்து வைத்திருந்தாராம். இதனை, அந்தப் பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்த மயில்கள் திங்கள்கிழமை தின்ாம். இதில், 5 மயில்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. ஒரு மயில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

தகவலறிந்த வனச்சரக அதிகாரிகள் நிகழ்விடம் சென்று 5 மயில்களின் சடலங்களை மீட்டு திருவண்ணாமலை வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். மற்றொரு மயிலுக்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் களம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.