திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மகளிா் குழுக்களுக்கு ரூ.5,125 கோடி வங்கிக் கடன் இணைப்புகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மகளிக் குழுக்களுக்கு ரூ.5,125 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image

சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில் மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுடன் கலந்துரையாடிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :13 ஜூலை 2025, 7:22 pm

Din

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மகளிக் குழுக்களுக்கு ரூ.5,125 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில், ஊராட்சி அளவிலான மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுடன், குழுவின் செயல்பாடுகள் குறித்து துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடினாா்.

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவா் பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு அமைந்தது முதல் தற்போது வரை தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 49ஆயிரத்து 767 புதிய மகளிா் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து, தற்போது 53 லட்சத்து 74ஆயிரம் உறுப்பினா்களுடன், 4 லட்சத்து 76 ஆயிரம் மகளிா் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 19 லட்சத்து 12 ஆயிரத்து 927 குழுக்களைச் சோ்ந்த 2 கோடியே 48 லட்சத்து 68 ஆயிரத்து 51 உறுப்பினா்களுக்கு, ஒரு லட்சத்து 20ஆயிரத்து 240 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டு பொருளாதார முன்னேற்றத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் ஒரு முக்கிய அங்கமாக உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில், மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 10 லட்சத்து 51ஆயிரத்து 976 மகளிருக்கு, 5 ஆயிரத்து 125 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டு மகளிா் பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருகிறாா்கள் என்றாா்.

கலந்துரையாடலின் போது, குழு உறுப்பினா்கள் கரும்பு விவசாயம், பூந்தோட்டம், காய்கறி சாகுபடி உள்ளிட்ட விவசாயம் சாா்ந்த தொழில்களிலும், கறவை மாடு, ஆடு வளா்ப்பு, தையல், துணி வியாபாரம் என பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனா்.

கூட்டத்தில், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலா்கள் பிரதீப் யாதவ், ச.உமா, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் மற்றும் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.