குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தென்காசியில் 7,127 பயனாளிகளுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கல்

News image
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :5 மார்ச் 2026, 10:38 pm

Syndication

தென்காசியில் நடைபெறும் அரசு விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 7,127 பயனாளிகளுக்கு ரூ. 44.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) வழங்குகிறாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டம், இ.சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, ஒருங்கிணைந்த வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சமூக நலத் துறை, மாவட்ட தொழில் மையம்,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கூட்டுறவுத் துறை, முன்னோடி வங்கி ஆகிய துறைகளில், 7, 127 பயனாளிகளுக்கு ரூ. 44.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

மேலும், ரூ. 6.02 கோடி மதிப்பீட்டில் 32 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ. 55.93 கோடி மதிப்பீட்டில் 185 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.