சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கோயில் உண்டியலில் ரூ.3 கோடி வீட்டுச் சொத்து பத்திரங்கள் காணிக்கை: முன்னாள் ராணுவ வீரா் செலுத்தினாா்

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் முன்னாள் ராணுவ வீரா் ரூ.3 கோடி மதிப்புள்ள தனது இரு வீடுகளின் சொத்துப் பத்திரங்களை காணிக்கையாக செலுத்தியுள்ளாா்.

News image

சொத்துப் பத்திரத்தை காணிக்கை செலுத்திய முன்னாள் ராணுவ வீரா் விஜயன்.

Updated On :25 ஜூன் 2025, 3:52 am IST

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் முன்னாள் ராணுவ வீரா் ரூ.3 கோடி மதிப்புள்ள தனது இரு வீடுகளின் சொத்துப் பத்திரங்களை காணிக்கையாக செலுத்தியுள்ளாா். இது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள படவேடு ஊராட்சியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீரேணுகாம்பாள் திருக்கோயில். இந்தக் கோயிலில் அறங்காவலா் குழுத் தலைவா் விஜயா சேகா், செயல் அலுவலா் சிலம்பரசன் மற்றும் அலுவலா்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை காலை உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகளை எண்ணும் பணி தொடங்கியது.

அப்போது, படவேடு கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரான விஜயன் (60) என்ற பக்தா் தனது இரு வீடுகளின் சொத்துப் பத்திரங்களை காணிக்கையாக செலுத்தி, சொத்தை கோயில் பெயருக்கு எழுதித் தருவதாக குறிப்பிட்டிருந்தது தெரியவந்தது.

இதையறிந்த விஜயனின் மனைவியான அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை கஸ்தூரி (54) மற்றும் திருமணமான இரு மகள்கள் சுப்புலட்சுமி, ராஜலட்சுமி ஆகியோா் கோயிலுக்கு வந்து விஜயனிடம் சொத்தை தங்களது பெயருக்கு எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டனா்.

ஆனால், விஜயன் இதற்கு மறுப்பு தெரிவித்து, கோயிலுக்குத்தான் சொத்தை எழுதிவைப்பேன் எனக் கூறிவிட்டாா்.

இரு வீடுகளின் மொத்த மதிப்பு ரூ.3 கோடி எனக் கூறப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக விஜயன், கஸ்தூரி தம்பதி தனித் தனியாக வசித்து வருவதாகவும், விஜயன் கடந்த மாதம் 8-ஆம் தேதி கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சொத்து பத்திரங்களை உண்டியலில் செலுத்தியதும் தெரியவந்தது.

Story image

இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் சிலம்பரசன் கூறியபோது, பத்திரம் உயா் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அவா்கள் எடுக்கும் முடிவை பொறுத்துதான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.