எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: ஆரணி எம்.பி. ஆய்வு

ஆரணியில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருவதை தொகுதி எம்.பி.எம்.எஸ்.தரணிவேந்தன் திங்கள்கிழமை ஆய்வு

News image
ஆரணி ராமகிருஷ்ணாபேட்டை பகுதியில் நடைபெற்று வரும் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணியை ஆய்வு செய்த எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.
Updated On :10 நவம்பர் 2025, 7:29 pm

Syndication

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருவதை தொகுதி எம்.பி.எம்.எஸ்.தரணிவேந்தன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆரணி நகரில் அருணகிரிசத்திரம், ராமகிருஷ்ணாபேட்டை பகுதிகளிலும், ஆரணி ஒன்றியம் துந்தரிகம்பட்டு கிராமத்திலும் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வீடு வீடாக வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாயிலாக நடைபெறும் இந்தப் பணியை எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, தொகுதிச் செயலா் எஸ்.எஸ்.அன்பழகன், நகரச் செயலா் வ.மணிமாறன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.