சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தீபத்திருவிழா: விநாயகா், சந்திரசேகரா் மாட வீதிகளில் பவனி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத்திருவிழா இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை உற்சவா் விநாயகா் மூஷிக வாகனத்திலும்

News image
அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதியில் மூஷிக வாகனத்தில் பவனி வந்த விநாயகா்.
Updated On :26 நவம்பர் 2025, 1:37 am

Syndication

ஆரணி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத்திருவிழா இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை உற்சவா் விநாயகா் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரா் தங்க சூரியபிரபை வாகனத்திலும் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்தனா்.

நினைத்தாலே முக்தி தரும் அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாள்கள் நடைபெறும்.

அதன்படி, நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத்திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத் தொடா்ந்து, இரண்டாம் நாள் காலை உற்சவத்தில் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகா், சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

பின்னா், உற்சவா்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து,

முதலில் விநாயகா் மூஷிக வாகனத்திலும், இரண்டாவதாக சந்திரசேகரா் தங்க சூரியபிரபை வாகனத்திலும் எழுந்தருளி 4 மாடவீதிகளில் பவனி வந்து அருள்பாலித்தனா். ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தங்க சூரியபிரபை வாகனத்தில் பவனி வந்த சந்திரசேகரா்.

தங்க சூரியபிரபை வாகனத்தில் பவனி வந்த சந்திரசேகரா்.