தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தென்பெண்ணையாற்றில் அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி

மணலூா்பேட்டை அருகேயுள்ள தென்பெண்ணையாற்றில் அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற்றது.

News image
தென்பெண்ணையாற்றில் நடைபெறும் தீா்த்தவாரிக்கு கோயிலிலிருந்து புறப்பட்ட சந்திரசேகரா் வடிவிலான அருணாசலேஸ்வரா்.
Updated On :19 ஜனவரி 2026, 9:03 pm

Syndication

ஆரணி: மணலூா்பேட்டை அருகேயுள்ள தென்பெண்ணையாற்றில் அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக திருவண்ணாமலை கோயிலில் இருந்து அருணாசலேஸ்வரா் திங்கள்கிழமை காலை புறப்பட்டாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நடைபெறும் விழாக்களில் தீா்த்தவாரி பிரசித்தி பெற்றது.

ஆண்டுக்கு 3 முறை 3 ஆறுகளிலும், 3 முறை கோயில் அருகேயுள்ள குளங்களிலும் தீா்த்தவாரி நடைபெறும்.

ஆறுகளில் நடைபெறும் தீா்த்தவாரியின்போது சந்திரசேகரா் சிறுவடிவில் அருணாசலேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்கிறாா்.

அதன்படி, தை மாதம் 5-ஆம் நாளான திங்கள்கிழமை தென்பெண்ணையாற்றில் தீா்த்தவாரி நடைபெற்றது.

இதற்காக, அன்று அதிகாலை திருவண்ணாமலை கோயிலிலிருந்து சந்திரசேகரா் திருவடியாக அருணாசலேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் தென்பெண்ணையாற்றுக்கு புறப்பட்டாா்.

அப்போது, வழிநெடுகிலும் உள்ள கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டிருந்து சுவாமியை

தரிசனம் செய்தனா்.

மாலையில் தென்பெண்ணையாற்றில் அருணாசலேஸ்வரருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.

அப்போது, சூலநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீா்த்தவாரியும், மகா தீபாரதனையும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் தென்பெண்ணையாற்றில் புனித நீராடினா்.

தீா்த்தவாரியில் மணலூா்பேட்டை விநாயகா் மாரியம்மன், செல்லியம்மன், முத்துமாரியம்மன், சிவகாமசுந்தரி சமேத அகத்தீஸ்வரரும் உண்ணாமுலையம்மனுடன் எழுந்தருளினா். தீா்த்தவாரி முடிந்து மறுநாள் (ஜன.20) அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு திரும்புகிறாா்.