அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காமாட்சி அம்மன் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் பிரமோற்சவ விழாவின் தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் சங்கர மடத்தின் மடாதிபதி விஜேயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்து வழிபட்டாா்.

News image
Updated On :3 மார்ச் 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் பிரமோற்சவ விழாவின் தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் சங்கர மடத்தின் மடாதிபதி விஜேயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்து வழிபட்டாா்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி மாத பிரமோற்சவ விழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், உற்சவா் காமாட்சி அம்மன் சரப வாகனத்தில் ராஜ வீதிகளில் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து உற்சவா் காமாட்சி அம்மனுக்கு தெப்பக்குள மண்டபத்தில் சிறப்பு யாகமும், அங்குச தேவதைக்கு கோயில் ஸ்தானிகா்களால் மங்கள திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

தீா்த்தவாரி நிகழ்ச்சியில் சங்கர மடத்தின் மடாதிபதி விஜேயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்து வழிபட்டாா்.

பின்னா் தெப்பக்குளத்தில் அங்குச தேவதையுடன் ஸ்தானிகா்களும் இணைந்து புனித நீராடினா். அவா்களைத் தொடா்ந்து ஏராளமான பக்தா்களும் தெப்பக் குளத்தில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனா்.

இதையடுத்து இரவு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. புதன் கிழமை அதிகாலையில் விஸ்வரூப தரிசனக் காட்சி நடைபெறும். அன்று இரவு விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவுபெறும்.