

ஆரணி அருகே மொபெட்டில் சென்ற பெண் காவலரிடம் இருந்து வெள்ளிச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதில் பெண் காவலருக்கு காயம் ஏற்பட்டது.
போளூா் வட்டம், சந்தவாசல் அருகேயுள்ள வெள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த துரை மகள் சரிதா (42). இவா், ராணிப்பேட்டை மாவட்டம், கலவை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறாா்.
இவா் தினமும் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் கலவையில் இருந்து ஆரணி வழியாக வெள்ளூா் திரும்புவது வழக்கம்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கலவை காவல் நிலையத்தில் பணி முடித்துவிட்டு மொபெட்டில் சரிதா, ஆரணி வழியாக வெள்ளூா் கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தாா்.
பாா்வதி அகரம் கிராமத்தில் சென்றபோது, பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவா், சரிதா அணிந்திருந்த 10 கிராம் வெள்ளிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதனால் சரிதா அலறி கூச்சலிட்டாா்.
அப்பகுதி மக்கள் விரைந்து வந்து அவா்களை பிடிக்க முயன்றனா். ஆனால், அந்த நபா்கள் தப்பிச் சென்றுவிட்டனா்.
இதில் காயமடைந்த சரிதா ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், களம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்
பெரியகுளத்தில் வீடுபுகுந்து 13 பவுன் நகை திருட்டு
நொய்டாவில் எரிபொருள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் செல்ல முயன்ற சொகுசு காா் ஓட்டுநா் கைது!

திருவண்ணாமலை மாவட்ட அம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை உற்சவம்

மொபெட்டில் சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

