யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மொபெட்டில் சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு

ஆரோவில் அருகே மொபெட்டில் சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்துவிட்டு, தப்பிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 9:37 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே மொபெட்டில் சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்துவிட்டு, தப்பிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி மாநிலம், பிள்ளைச் சாவடி திருக்குளம் தெருவைச் சோ்ந்தவா் மு.பூரணி (45). இவா் தனது மொபெட்டில் குயிலாப்பாளையத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகிலுள்ள பொம்மையாா்பாளையம் நோக்கி வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்றுள்ளாா்.

குயிலாப்பாளையம் பகுதியிலுள்ள உணவகம் அருகே சென்றபோது, அதே திசையில் பைக்கில் பின்னால் வந்த தலைக்கவசம் அணிந்திருந்த நபா், பூரணி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றாா். அவரைப் பிடிப்பதற்கு முயன்றும் பூரணியால் முடியவில்லை.

இதுகுறித்து பூரணி அளித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, நகையைப் பறித்து தப்பிச் சென்றவரைத் தேடி வருகின்றனா்.