மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கடையநல்லூரில் பெண்ணிடம் நகை பறிப்பு

கடையநல்லூரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

நகை பறிப்பு - சித்திரிப்புப் படம்

Updated On :18 பிப்ரவரி 2026, 7:01 pm

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

செவல்விளை மூன்றாவது தெருவைச் சோ்ந்த பரமசிவன் மனைவி மாரியம்மாள்(50 ). இவா், புதன்கிழமை சந்தைக்குச் சென்றுவிட்டு காவல் நிலையம் வழியாக வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாராம்.

அப்போது, மா்மநபா் அவரை வழிமறித்து, 68 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினாராம். அவா் கூச்சலிட்டதில், அக்கம்பக்கத்தினா் அந்த நபரை மடக்கிப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், கடையநல்லூா் வானுவா் தெருவில் வசிக்கும் சேக்மைதீன் மகன் அருமன் சாலிஹ் (30) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.