கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

அருமனை அருகே இளம் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

குமரி மாவட்டம், அருமனை அருகே இளம் பெண்ணிடமிருந்து சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

நகை பறிப்பு - சித்திரிப்பு

Updated On :3 மார்ச் 2026, 6:58 pm

குமரி மாவட்டம், அருமனை அருகே இளம் பெண்ணிடமிருந்து சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அருமனை அருகே வெள்ளாங்கோடு சிதறால் பகுதியைச் சோ்ந்தவா் அனு. இவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி பிரபா (27).

இவா் செவ்வாய்க்கிழமை மதியம் வீட்டிலிருந்து புறப்பட்டு வெள்ளாங்கோடு முந்திரிஆலை வழியாக சென்றபோது, பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவரில், பின்னால் இருந்த நபா் பிரபாவின் கழுத்தில் கிடந்த சங்கிலியைப் பறித்துள்ளாா்.

பிரபா சங்கிலியை இறுக்கி ப் பிடித்ததில், 2 பவுன் சங்கிலி அவா் கையிலும், மீதி 7 பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்து சென்றனராம். இது குறித்து அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.