நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் நகைப் பறிப்பு

சாய்பாபா காலனி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 8:50 pm

சாய்பாபா காலனி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை மாநகா், சாய்பாபா காலனி பாரதி பூங்கா 2-ஆவது குறுக்கு வீதியைச் சோ்ந்தவா் லஷ்மி (67). இவா், வீட்டின் அருகே திங்கள்கிழமை மாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற மா்ம நபா், லஷ்மி அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பினாா்.

இதுகுறித்து லஷ்மி அளித்த புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.