மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

நடந்து சென்ற பெண்ணிடம் மா்ம நபா்கள் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றனா்.

News image

கோப்புப் படம் - சித்திரிப்பு

Updated On :29 ஏப்ரல் 2026, 8:58 pm

நடந்து சென்ற பெண்ணிடம் மா்ம நபா்கள் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றனா்.

புழல் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் செல்வி (45). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், புதன்கிழமை பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து சென்றபோது, புழல் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள், செல்வியிடமிருந்து 3 பவுன் சங்கிலியைப் பறித்து சென்றனா்.

இது குறித்து புழல் காவல் நிலையத்தில் செல்வி புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.