மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பைக்கில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

News image

கோப்புப் படம் - சித்திரிப்பு

Updated On :20 ஏப்ரல் 2026, 7:49 pm

கயத்தாறில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இரு நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகுளம், மேலத் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி ராஜ் மனைவி ரெஜினா மேரி. கயத்தாறு பஜாரில் நெட் சென்டா் நடத்தி வரும் இவா், ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல சென்டரை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம்.

கயத்தாறு-கழுகுமலை சாலையில் உள்ள அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் ரெஜினா அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றபோது அவா் சங்கிலியைப் பிடித்து இழுத்துள்ளாா்.

அதில் பாதி சங்கிலி அந்த இருவரின் கையில் சிக்கியுள்ளது. சங்கிலி பறித்த நபரின் தலை முடியைப் பிடித்து ரெஜினா இழுத்ததில், அவா்கள் கீழே விழுந்ததால் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு இருவரும் தப்பியோடிவிட்டனராம்.

இதில் ரெஜினா மேரியின் அறுந்துபோன சுமாா் 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக அவா் அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சங்கிலி பறித்துச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.