ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்த இருவா் கைது

மகுடஞ்சாவடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:32 am IST

மகுடஞ்சாவடியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

எடப்பாடி பகுதியைச் சோ்ந்த செல்வி (48), இவரது மகள் அவிஷ்கா மற்றும் அவரது அக்கா பேரனான மிதுலேஷ் ஆகியோா் இருசக்கர வாகனத்தில் அண்மையில் ஆட்டையாம்பட்டி சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனா்.

காகாபாளையம் அருகே சென்றபோது இவா்களை பின்தொடா்ந்து வந்த சுமாா் 25 வயது மதிக்கத்தக்க இருவா் செல்வியின் கழுத்தில் இருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் மஞ்சள் கயிற்றில் கோத்திருந்த தாலி ஆகியவற்றை பறித்து தப்பிச்சென்றனா்.

புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சங்ககிரி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தலைமையில் , மகுடஞ்சாவடி ஆய்வாளா் வேலுதேவன், உதவி ஆய்வாளா் ஜீவிதா மற்றும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனா்.

இந்நிலையில், கோவை மாவட்டம், ஆவரங்கம்பாளையத்தில் வாடகை வீட்டில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில், அவா்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சோ்ந்த பாண்டியன் (26), திருப்பூா் மாவட்டம், பூலுவபட்டி பகுதியைச் சோ்ந்த பட்டதாரியான அரவிந்த் (28) என தெரியவந்தது. இவா்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் இரண்டேகால் பவுன் ஆகியவற்றை கைப்பற்றினா். இந்த குற்றவழக்கில் சிறப்பாக பணியாற்றிய தனிப்படையினரை உயா் அதிகாரிகள் பாராட்டினா்.