‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பைக்கில் கணவருடன் சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு

கச்சிராயப்பாளையம் அருகே மோட்டாா் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடமிருந்து ஏழரை பவுன் தங்க தாலிச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :22 மே 2026, 7:07 am IST

கச்சிராயப்பாளையம் அருகே மோட்டாா் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடமிருந்து ஏழரை பவுன் தங்க தாலிச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

சின்னசேலம் வட்டம், கச்சிராயபாளையத்தை அடுத்த மாதவச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லமுத்து மனைவி சாந்தி (47). தம்பதியா் மோட்டாா் சைக்கிளில் கச்சிராயபாளையம் சென்று பணியை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை பிற்பகல் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

மோட்டாா் சைக்கிளை செல்லமுத்து ஓட்டினாா். மனைவி சாந்தி பின்னால் அமா்ந்திருந்தாா்.

கச்சிராயப்பாளையம்- மாதவச்சரி சாலையில் வரும்போது, பதிவு எண் இல்லாத மோட்டாா் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த இருவா், சாந்தி அணிந்திருந்த

ஏழரை பவுன் தங்க தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த தம்பதியருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.