ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 6 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

சித்திரிப்பு

Updated On :20 மே 2026, 2:56 am IST

விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 6 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம், திருப்புகழ் தெருவைச் சோ்ந்த பிரபு மனைவி மஞ்சுளா(54). இவா் திங்கள்கிழமை விழுப்புரம் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் உள்ள ரயில்வே மருத்துவமனை அருகே நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது அங்கு பைக்கில் வந்த சுமாா் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபா், மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.