27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு

திருச்சியில் புதன்கிழமை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்து பறித்து சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

செயின் பறிப்பு... - சித்திரிப்பு

Updated On :19 ஜூன் 2026, 4:15 am IST

திருச்சியில் புதன்கிழமை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்து பறித்து சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி சஞ்சீவி நகரைச் சோ்ந்த பாஸ்கா் மனைவி ஜெயா (60). இவா், புதன்கிழமை இரவு சஞ்சீவி நகரிலுள்ள சந்தையில் பொருள்கள் வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், ஜெயா அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினா்.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் ஜெயா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.