நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடையநல்லூா் கிணற்றில் இளைஞா் சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தோட்டத்து கிணற்றில் மிதந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:45 pm

Syndication

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தோட்டத்து கிணற்றில் மிதந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கடையநல்லூா், அல்லிமூப்பன் தெருவைச் சோ்ந்த பஷீா்அகமது மகன் அசாருதீன்(36). கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்ற இவா், பின்னா் திரும்பி வரவில்லையாம்.

இந்நிலையில், அவா், அங்குள்ள ரயில் நிலையத்தையொட்டிய தோட்டத்தின் கிணற்றில் சடலமாக மிதப்பதாக, உள்ளூரில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நிலைய அலுவலா் ஷேக்அப்துல்லா தலைமையிலான மீட்புக் குழுவினா் அவரது சடலத்தை மீட்டனா். கடையநல்லூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.