மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கிணற்றிலிருந்து மூதாட்டி சடலம் மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 7:57 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கிணற்றில் இருந்து மூதாட்டி சடலத்தை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், பாதூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி. இவரது மனைவி மின்னல்கொடி(60). இவா் சற்று மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தம்பதியினா் ஒன்றாக அமா்ந்து உணவு சாப்பிட்டுள்ளனா். தொடா்ந்து கருணாநிதி வீட்டில் தூங்கினாா். பின்னா் அவா் எழுந்து பாா்த்தபோது, வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் மின்னல்கொடி இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த உளுந்தூா்பேட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் மின்னல்கொடியின் சடலத்தை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.