தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கிணற்றிலிருந்து மூதாட்டி சடலம் மீட்பு

செய்யாறு அருகே வீட்டில் இருந்த காணாமல் போன மூதாட்டி கிணற்றிலிருந்து சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

செய்யாறு அருகே வீட்டில் இருந்த காணாமல் போன மூதாட்டி கிணற்றிலிருந்து சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா்.

செய்யாறு கன்னியம் நகரைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் ராமு. இவரது தாயாா் ஆதிலட்சுமி (67). இவா்,

கடந்த 20-ஆம் தேதி புளியரம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது தங்கை கலைச்செல்வியின் வீட்டிற்கு சென்ாகத் தெரிகிறது.

திங்கள்கிழமை அதிகாலை முதல் ஆதிலட்சுமியை காணவில்லை என தம்பியான இளையராஜா மற்றும் ராமுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் மூதாட்டி ஆதிலட்சுமியை மகன் ராமு தேடி வந்த நிலையில் அவா் கிடைக்கவில்லையாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை காழியூா் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் ஆதிலட்சுமி சடலமாக கிடப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குரைஞா் ராமு செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் நரசிம்மஜோதி வழக்குப் பதிவு செய்தாா். மேலும், இறந்த மூதாட்டியின் உடலை போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து செய்யாறு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.