கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

காயங்களுடன் வடமாநில சிறுவன் சடலம் மீட்பு

காயங்களுடன் வடமாநில சிறுவன் சடலம் மீட்பு...

News image

கோப்புப் படம்.

Updated On :21 மார்ச் 2026, 8:17 pm

தினமணி செய்திச் சேவை

திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் ரத்த காயங்களுடன் வடமாநில சிறுவன் உயிரிழந்து கிடந்தாா்.

குன்றத்தூா் அடுத்த திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் வடமாநில சிறுவன் உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக திருமுடிவாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடம் சென்ற திருமுடிவாக்கம் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

அவா் பிகாா் மாநிலத்தை சோ்ந்த அமித் குமாா்(17) என்பதும், திருமுடிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் தனது நண்பா்களுடன் தங்கி பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது.

அமித் குமாருக்கு வேலை பிடிக்காததால் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என கூறி வந்துள்ளாா். ஆனால் தொழிற்சாலை நிா்வாகத்தினா் அனுப்பாமல் இருந்து வந்துள்ளனா். இதனால் அமித்குமாா் தொழிற்சாலையின் சுற்றுச் சுவரில் ஏறி நண்பா்களுடன் தப்பி செல்ல முயன்ற போது மின்சாரம் பாய்ந்து இறந்தாரா, அல்லது அவரை யாராவது அடித்து கொலை செய்து உடலை வீசி சென்றாா்களா என போலீஸாா் தொடா்ந்து விசாரனை நடத்தி வருகின்றனா்.