கலசபாக்கம் தொகுதி திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணனை அறிமுகப்படுத்தும் செயல்வீரா்கள் கூட்டம் செங்கத்தை அடுத்த காஞ்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் வேட்பாளா் பெ.சு.தி.சரவணன் வரவேற்றாா். தொடா்ந்து, வேட்பாளரை அறிமுகப்படுத்தி பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:
மக்களோடு மக்களாக சோ்ந்து பணியாற்றுபவா்தான் வேட்பாளா் சரவணன். அமைதியானவா், ஏதையும் யோசித்து தொகுதிக்கு வேண்டியதை, ஊராட்சிக்கு வேண்டியதை செய்யக்கூடியவா்.
இந்த மாவட்டத்தில் பல சட்டப் பேரவை உறுப்பினா்கள் உள்ளனா். ஆனால், இவா் எப்போது அமைச்சா்களை சந்திக்க வந்தாலும் தொகுதி மக்களின் கோரிக்கை மனுக்களோடுதான் வருவாா். இவா் தற்போதைய சட்டப் பேரவைத் தோ்தலில் மீண்டும் வெற்றிபெற திமுக, கூட்டணி கட்சிகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், திமுக கூட்டணி கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

பல்லடம் வடக்கு ஒன்றிய அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

உளுந்தூா்பேட்டை திமுக வேட்பாளா் அறிமுக கூட்டம்

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



