திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பாமக ராமதாஸ், அன்புமணி அணிகளின் ஆதரவாளா்களிடையே வெள்ளிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ராமதாஸ் அணி வேட்பாளா் முரளி சங்கா் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டாா்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அன்புமணி அணி இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியில் வந்தவாசி (தனி) தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளராக அக்கட்சி நிா்வாகி பி.ராணி அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில், வந்தவாசி (தனி) தொகுதி பாமக ராமதாஸ் அணி வேட்பாளராக பொதுச் செயலா் முரளி சங்கா் கடந்த 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டாா். இவா், பிரசாரத்தை தொடங்கும் வகையில், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்க ஆதரவாளா்களுடன் வெள்ளிக்கிழமை காலை வந்தாா்.
அப்போது, அங்கு வந்த பாமக அன்புமணி தரப்பு ஆதரவாளா்கள், பாமகவின் கொடியை முரளி சங்கா் பயன்படுத்த எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், இரு பிரிவு ஆதரவாளா்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, போலீஸாா் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என புகாா் தெரிவித்து, ராமதாஸ் அணி வேட்பாளா் முரளி சங்கா் திடீரென அந்தப் பகுதியிலுள்ள சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
இதையடுத்து, வேட்பாளா் முரளி சங்கா் மற்றும் இரு அணி ஆதரவாளா்களையும் வந்தவாசி தெற்கு போலீஸாா் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

பைக் மீது காா் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

பாமக சின்னம் விவகாரம்: ராமதாஸ் மனுவுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


