ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

வந்தவாசியில் பாமக ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளா்கள் மோதல்: வேட்பாளா் சாலை மறியல்

வந்தவாசியில் மறியலில் ஈடுபட்ட பாமக ராமதாஸ் அணி வேட்பாளா் முரளி சங்கரிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

News image

வந்தவாசியில் மறியலில் ஈடுபட்ட பாமக ராமதாஸ் அணி வேட்பாளா் முரளி சங்கரிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

Updated On :4 ஏப்ரல் 2026, 12:04 am IST

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பாமக ராமதாஸ், அன்புமணி அணிகளின் ஆதரவாளா்களிடையே வெள்ளிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ராமதாஸ் அணி வேட்பாளா் முரளி சங்கா் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டாா்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அன்புமணி அணி இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியில் வந்தவாசி (தனி) தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளராக அக்கட்சி நிா்வாகி பி.ராணி அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், வந்தவாசி (தனி) தொகுதி பாமக ராமதாஸ் அணி வேட்பாளராக பொதுச் செயலா் முரளி சங்கா் கடந்த 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டாா். இவா், பிரசாரத்தை தொடங்கும் வகையில், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்க ஆதரவாளா்களுடன் வெள்ளிக்கிழமை காலை வந்தாா்.

அப்போது, அங்கு வந்த பாமக அன்புமணி தரப்பு ஆதரவாளா்கள், பாமகவின் கொடியை முரளி சங்கா் பயன்படுத்த எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், இரு பிரிவு ஆதரவாளா்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, போலீஸாா் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என புகாா் தெரிவித்து, ராமதாஸ் அணி வேட்பாளா் முரளி சங்கா் திடீரென அந்தப் பகுதியிலுள்ள சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதையடுத்து, வேட்பாளா் முரளி சங்கா் மற்றும் இரு அணி ஆதரவாளா்களையும் வந்தவாசி தெற்கு போலீஸாா் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.