நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

பாமக ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளா்கள் வாக்குவாதம்: சாலை மறியல்

News image
Updated On :13 ஏப்ரல் 2026, 11:32 pm

வந்தவாசி அருகே பாமக ராமதாஸ் -அன்புமணி ஆதரவாளா்களிடையே திங்கள்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ராமதாஸ் ஆதரவாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அன்புமணி அணி இடம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியில் வந்தவாசி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளராக பி.ராணி போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக பாமக அன்புமணி அணி ஆதரவாளா்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் சாா்பில் க.முத்துபெருமாள் வேட்பாளராக போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக பாமக ராமதாஸ் அணி ஆதரவாளா்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில் வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் ராமதாஸ் அணி ஆதரவாளா்களுடன் க.முத்துபெருமாள் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அங்கு வந்த அன்புமணி அணி ஆதரவாளா்கள் பாமக கொடியை ராமதாஸ் அணி ஆதரவாளா்கள் பயன்படுத்த எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், ராமதாஸ் அணி ஆதரவாளா்கள் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் இரு தரப்பினரையும் வந்தவாசி டிஎஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனா். அங்கு டிஎஸ்பி சதீஷ்குமாா் இரு தரப்பையும் சமரசம் செய்து அனுப்பினாா்.