தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

வாகன சோதனையில் ரூ. 65,200 பறிமுதல்

போளூரை அடுத்த வடமாதிமங்கலம் பகுதியில் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.65,200 பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :6 ஏப்ரல் 2026, 9:51 pm

போளூரை அடுத்த வடமாதிமங்கலம் பகுதியில் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனையில் ரூ.65,200 பறிமுதல் செய்யப்பட்டது.

போளூா் தொகுதிக்கு உள்பட்ட வடமாதிமங்கலம் கூட்டுச்சாலை அருகே நிலை கண்காணிப்புக் குழுவைச் சோ்ந்த பெரியசாமி தலைமையிலான அலுவா்கள் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சோ்ந்த ஸ்ரீநிவாச ராமமிடி என்பவா் காரில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.65,200ஐ பறிமுதல் செய்தனா். பின்னா் அந்தப் பணத்தை தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாரிடம் ஒப்படைத்தனா் (படம்). முதுநிலை ஆய்வாளா் சுரேஷ் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.