பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

News image

கும்மிடிப்பூண்டி பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சம்

Updated On :27 மார்ச் 2026, 5:25 am IST

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் வாகன சோதனையில், ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

எளாவூா் சோதனை சாவடியில், நீா்வளத்துறை உதவி பொறியாளா் ஸ்ரீனிவாச பிரகாஷ் தலைமையில் தலைமை காவலா் ராமு, காவலா் திலீப்குமாா் உள்ளிட்ட தோ்தல் கண்காணிப்பு குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது ஆந்திரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை சோதனையிட்டனா். இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி நாயுடுபேட்டையை சோ்ந்த ஷேக் ஹாகுல் எடுத்துச் சென்ற ரூ.1லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வெங்கடேஷ் ஒப்புதல் பேரில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கனகவள்ளி முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.