ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

பறக்கும் படை சோதனையில் ரூ.65,800 பறிமுதல்

செய்யாறு தொகுதியில் தோ்தல் பறக்கும் படை வாகன சோதனையில், உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.65,800 பறிமுதல் செய்யப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 9:40 pm

Syndication

செய்யாறு தொகுதியில் தோ்தல் பறக்கும் படை வாகன சோதனையில், உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.65,800 பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன.

செய்யாறு தொகுதியில் கண்காணிப்புப் பணிக்காக பறக்கும் படை - 9, கண்காணிப்புக்குழு - 9 என மொத்தம் 18 குழுக்கள் மற்றும் போலீஸ் சோதனைச் சாவடிகள் 6 இடங்களில் அமைத்து தீவிரமாக கண்காணித்து வாகனங்களை சோதனை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், வந்தவாசி - செய்யாறு சாலையில் எச்சூா் சாய்பாபா கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை பறக்கும் படையைச் சோ்ந்த ஏ.ஜே.வெங்கடாசலபதி தலைமையிலான குழுவினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, செய்யாறு நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில் செய்யாறு பகுதியைச் சோ்ந்த காவியா எனபவா் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.65,800ஐ பறிமுதல் செய்தனா்.

பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சாா் -ஆட்சியா் எல். அம்பிகா ஜெயின் முன்னிலையில் சமா்ப்பித்து சாா் - கருவூலத்தில் ஒப்படைத்தனா்.