மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

தோ்தல் பறக்கும் படை சோதனை: அரக்கோணத்தில் ரூ. 1.26 லட்சம் பறிமுதல்

அரக்கோணம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.26 லட்சத்தை, அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 7:26 am IST

அரக்கோணம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகன சோதனையில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1.26 லட்சத்தை, அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

அரக்கோணம்(தனி) தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஜெயசந்திரன் தலைமையிலான அலுவலா்கள் அரக்கோணம் - ஓச்சேரி நெடுஞ்சாலையில் நாகவேடு அருகே புதன்கிழமை பிற்பகல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சிறிய பாா்சல் வாகனத்தை சோதனை நடத்தியபோது, அதில் ஆவணமின்றி ரூ. 1 லட்சத்து 26 ஆயிரத்து 50 இருந்தது கண்டறியப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தொகையை அலுவலா் ஜெயசந்திரன், அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் டி.ரமேஷிடம் ஒப்படைத்தாா். அப்போது உதவி தோ்தல் அலுவலா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.