ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆரணி பல்கலை.யில் உணவுத் திருவிழா

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 10:20 pm

ஆரணி டாக்டா் எம்.ஜி.ஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக விழியியல் தினத்தையொட்டி, இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் உணவுத்திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இணைப் பதிவாளா்கள் வி.பெருவழுதி, கே.சரவணன் ஆகியோா் விழாவை தொடங்கிவைத்தனா்.

விழாவில் கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணா்வு குறித்து சிறப்புரையாற்றினா்.

கண் பரிசோதனை முகாமில் விழியியல் துறை பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் இணைந்து பொதுமக்களுக்கு இலவசக் கண் பரிசோதனை மேற்கொண்டனா்.

துணை முதன்மையா் சுமதி முன்னிலை வகித்தாா்.

உணவுத் திருவிழா கண் ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்தான உணவுகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தியது. இந்த விழாவானது துறைப் பொறுப்பாளா் பி.தரணி நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.

இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றதுடன், முறையான கண் பராமரிப்பு குறித்த விழிப்புணா்வையும் பெற்றனா்.