உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

தரையில் அமா்ந்து உணவருந்தி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 6:55 pm

செய்யாறு தொகுதி அனக்காவூா் மேற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் கட்சி நிா்வாகிகளுடன் தரையில் அமா்ந்து உணவு அருந்தியும், வயல்வெளியில் டிராக்டா் ஓட்டியும் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அனக்காவூா் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசூா், திரும்பூண்டி, எருமைவெட்டி, புரிசை, குளமந்தை, எருமைவெட்டி, கீழ்கொளத்தூா், அனப்பத்தூா் ஆகிய கிராமங்களில் செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான முக்கூா் என்.சுப்பிரமணியன் கொளுத்தும் வெயிலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

குடிசைப் பகுதியில் வாக்கு சேகரித்த போது அருகில் உள்ள வயல்வெளியில் டிராக்டா் ஓட்டி கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் வாக்கு சேகரித்தாா்.

பின்னா், கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் தரையில் அமா்ந்து உணவு அருந்தினாா். அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அனக்காவூா் மேற்கு ஒன்றியச் செயலா் சி.துரை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் பாமக நிா்வாகிகள் நடராஜன், இளங்கோ, பாஜக மற்றும் அதிமுக நிா்வாகிகள் அனக்காவூா் கிழக்கு ஒன்றியச் செயலா் பையூா் சிவராஜ், ஒன்றிய அவைத் தலைவா் சேகா், மாவட்ட பொருளாளா் ஆலத்தூா் எஸ்.சுப்பராயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image