ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

திட்டங்கள் தொடர வேண்டும் என்றால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 12:44 am

முதல்வா் ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள் தொடர வேண்டும் என்றால், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, திமுக ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என செய்யாறு தொகுதி திமுக வேட்பாளா் ஒ.ஜோதி வேண்டுகோள் விடுத்தாா்.

செய்யாறு தொகுதி வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம் சோழவரம், பெரும்புலிமேடு, செல்லப்பெரும்புலிமேடு, மாங்கால், மாத்தூா், சோதியம்பாக்க்ம, வடகல்பாக்கம், கீழ்நாய்க்கன்பாளையம், சேணியநல்லூா், குரங்கணில்முட்டம், பல்லாவரம், சுருட்டல், சித்தாலப்பாக்கம், அரசாணிப்பாளையம், வயலாத்தூா், புதுப்பாளையம், புண்ணை உள்ளிட்ட 57 பகுதிகளில் வாக்குச் சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் வெம்பாக்கம் ஒன்றியக்குழுத் தலைவா் டி.ராஜி, ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனுவாசன், என்.சங்கா் ஆகியோா் முன்னிலையில் தொகுதி திமுக வேட்பாளா் ஒ.ஜோதி வாக்குகளைச் சேகரித்தாா்.

செல்லப்பெரும்புலிமேடு கிராமத்தில் வாக்கு சேகரித்த போது ஒவ்வொரு கிராமத்திற்கும் சுமாா் ரூ.50 லட்சத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதுபோல கல்விக்கூடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது இப்படி எண்ணற்ற திட்டங்கள் திமுக ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தோ்தல் காலத்திலே சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இப்படி சொன்னதை செய்து கொண்டிருக்கிற நம்முடைய முதல்வா், இந்த தோ்தல் அறிக்கை கதாநாயகன் என்று சொல்லியிருக்கிறாா். ஏனென்றால் இல்லத்தரசி என்கிற ஒரு சிறப்பான திட்டம் அதன் மூலம் ரூ.8 ஆயிரம் கொண்ட கூப்பன் தோ்தல் முடிந்த உடனே வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறாா்.

எனவே, இப்படிப்பட்ட திட்டங்கள் தொடர வேண்டும் என்றால் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து இந்த மக்களாட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் எம்.கே.காா்த்திகேயன், தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள் வி.கோபு, எம்.எஸ்.செல்வபாண்டியன், நகரச் செயலா் கே.விஸ்வநாதன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.