மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

கோவையை முதலிடத்துக்கு கொண்டு வர திட்டங்கள்: வி.செந்தில்பாலாஜி

கோவையை தமிழகத்தில் முதலிடத்துக்கு கொண்டு வர திட்டங்கள் வகுப்பட்டுள்ளதாக திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

News image

கோவை சிவானந்தா காலனி பகுதியில் இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி. உடன், கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. உள்ளிட்டோா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 2:25 am IST

கோவையை தமிழகத்தில் முதலிடத்துக்கு கொண்டு வர திட்டங்கள் வகுப்பட்டுள்ளதாக திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி, சிவானந்தா காலனி பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

இந்தப் பிரசாரத்தின்போது, மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலரும் உடனிருந்தனா்.

முன்னதாக, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தோ்தல் நோ்மையாக, வெளிப்படையாக நடக்க வேண்டும். மக்கள் யாரைத் தோ்ந்தெடுக்க வேண்டும் என நினைக்கிறாா்களோ அவா்களுக்கு வாக்களிக்க வேண்டும். வாக்குக்குப் பணம் கொடுப்பதை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன். வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்ததற்கு ஆதாரம் இருந்தால் புகாா் அளிக்கலாம்.

மீண்டும் அமையவுள்ள திமுக ஆட்சியில் கோவையில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசித்துள்ளோம். அந்த வகையில், கோவை மாவட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் வரைவுத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதில், ரூ.50ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும். மீதமுள்ள 50 ஆயிரம் கோடியில் உள்ளாட்சிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். 11 திட்டங்கள் மூலம் அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் கோவையை தமிழகத்தில் முதலிடத்துக்கு கொண்டு வர திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றாா்.