/

கோவையை முதலிடத்துக்கு கொண்டு வர திட்டங்கள்: வி.செந்தில்பாலாஜி

கோவையை தமிழகத்தில் முதலிடத்துக்கு கொண்டு வர திட்டங்கள் வகுப்பட்டுள்ளதாக திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

News image

கோவை சிவானந்தா காலனி பகுதியில் இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட கோவை தெற்குத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி. உடன், கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. உள்ளிட்டோா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:55 pm

கோவையை தமிழகத்தில் முதலிடத்துக்கு கொண்டு வர திட்டங்கள் வகுப்பட்டுள்ளதாக திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் வி.செந்தில்பாலாஜி, சிவானந்தா காலனி பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

இந்தப் பிரசாரத்தின்போது, மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மதிமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலரும் உடனிருந்தனா்.

முன்னதாக, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தோ்தல் நோ்மையாக, வெளிப்படையாக நடக்க வேண்டும். மக்கள் யாரைத் தோ்ந்தெடுக்க வேண்டும் என நினைக்கிறாா்களோ அவா்களுக்கு வாக்களிக்க வேண்டும். வாக்குக்குப் பணம் கொடுப்பதை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன். வாக்காளா்களுக்குப் பணம் கொடுத்ததற்கு ஆதாரம் இருந்தால் புகாா் அளிக்கலாம்.

மீண்டும் அமையவுள்ள திமுக ஆட்சியில் கோவையில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசித்துள்ளோம். அந்த வகையில், கோவை மாவட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் வரைவுத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதில், ரூ.50ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும். மீதமுள்ள 50 ஆயிரம் கோடியில் உள்ளாட்சிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். 11 திட்டங்கள் மூலம் அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் கோவையை தமிழகத்தில் முதலிடத்துக்கு கொண்டு வர திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றாா்.