மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரும், காங்கயம் தொகுதி வேட்பாளருமான மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தினாா்.
காங்கயம் அருகேயுள்ள முத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் அவா் பேசியதாவது: 2021-இல் நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னா் பல்வேறு சிறப்பான திட்டங்களை இத்தொகுதிக்கு கொண்டு வந்துள்ளேன். கலைஞா் மகளிா் உரிமைத் தொகைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதேபோல, 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி ரூ.2,000 கோடியும் வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு எதிரான 43 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால் போராட்டம் நடத்திய ஏராளமான விவசாயிகள் உயிரிழந்தனா். விவசாயிகளின் போராட்டத்துக்கு பிரதமா் மோடியே காரணம். மகளிா் உரிமைத் திட்டம் ஒரு மகத்தான திட்டமாகும். திமுக அரசு மீண்டும் பொறுப்பேற்றதும் அத்திட்டத் தொகை ரூ.2 ஆயிரமாக வழங்கப்படும். இதேபோல, முதியோா் உரிமைத் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையும் ரூ.1,500-இல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும்.
குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். முதல்வரின் காப்பீட்டுத் திட்டம் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயா்த்தப்படும். மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கே வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் தற்போதுவரை சுமாா் 2 கோடி போ் பயனடைந்துள்னா். மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுக கூட்டணி வெற்றிபெற வேண்டும்: தேமுதிக வேட்பாளா் மருத்துவா் வி.இளங்கோவன்.

திமுக அரசின் சாதனைகள் தொடர மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.

அரசின் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

திமுக ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்படும்! - அமைச்சா் மு.பெ.சாமிநாதன்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


