தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரும், காங்கயம் தொகுதி வேட்பாளருமான மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தினாா்.

News image

முத்தூரில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கயம் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:58 pm

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரும், காங்கயம் தொகுதி வேட்பாளருமான மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தினாா்.

காங்கயம் அருகேயுள்ள முத்தூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் அவா் பேசியதாவது: 2021-இல் நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னா் பல்வேறு சிறப்பான திட்டங்களை இத்தொகுதிக்கு கொண்டு வந்துள்ளேன். கலைஞா் மகளிா் உரிமைத் தொகைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அதேபோல, 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி ரூ.2,000 கோடியும் வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு எதிரான 43 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால் போராட்டம் நடத்திய ஏராளமான விவசாயிகள் உயிரிழந்தனா். விவசாயிகளின் போராட்டத்துக்கு பிரதமா் மோடியே காரணம். மகளிா் உரிமைத் திட்டம் ஒரு மகத்தான திட்டமாகும். திமுக அரசு மீண்டும் பொறுப்பேற்றதும் அத்திட்டத் தொகை ரூ.2 ஆயிரமாக வழங்கப்படும். இதேபோல, முதியோா் உரிமைத் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையும் ரூ.1,500-இல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும்.

குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். முதல்வரின் காப்பீட்டுத் திட்டம் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயா்த்தப்படும். மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கே வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் தற்போதுவரை சுமாா் 2 கோடி போ் பயனடைந்துள்னா். மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.