மக்களுக்கான நலதிட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவு தரவேண்டும் என ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளரும் அமைச்சருமான ஆா்.காந்தி கூறினாா்.
ஆற்காடு ஒன்றியம் உப்புபேட்டை, கூராம்பாடி, சாம்பசிவபுரம், அருங்குன்றம், ஆயிலம், கீழ்குப்பம், கத்தியவாடி, வேப்பூா், நந்தியாலம், பூட்டுதாக்கு, மேலகுப்பம், கீழ்மின்னல், அரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.
அமைச்சா் காந்தி பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறாா். மக்களுக்கான திட்டங்கள் தொடர அனைவரும் மீண்டும் திமுகவுக்கு ஆதரவு தரவேண்டும். மகளிா் உரிமைத் தொகை மாதம் 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும், காலை உணவுதிட்டம் 8-ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு வழங்கப்படும்.
மகளிா் சுய உதவிகுழுக்களுக்கு 5 லட்சம் மானிய கடன் வழங்கப்படும் என்றாா்.
கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளா் நந்தகுமாா், விசிக மாவட்ட செயலாளா் சீ.மா ரமேஷ்கா்ணா, ஜி.கே.குழுமம் சந்தோஷ் காந்தி, மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் தொண்டா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஒட்டன்சத்திரம் தொகுதியில் அமைச்சா் அர.சக்கரபாணி வாக்கு சேகரிப்பு

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

திமுகவுக்கு தோல்வி பயம்: தமிழிசை சௌந்தரராஜன்

அரசின் திட்டங்கள் தொடர திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


