திமுக ஆட்சியில் தான் ஆரணி தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சா் எ.வ.வேலு பெருமிதம் தெரிவித்தாா்.
ஆரணி அண்ணா சிலை அருகில் திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனனை ஆதரித்து எ.வ.வேலு பேசியதாவது:
தமிழகத்தில் மகளிா்களுக்காக புதுமைப்பெண் திட்டம், கலைஞா் உரிமைத்தொகை திட்டம், இலவச பேருந்து உள்ளிட்ட திட்டங்களும், பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் என இந்தியாவில் எங்கும் இல்லாத திட்டங்களை தமிழக முதல்வா் கொண்டு வந்துள்ளாா்.
மேலும் ரூ.15 கோடி மதிப்பில் பூசிமலைக்குப்பம் கண்ணாடி மாளிகை அரண்மனை புதுப்பிக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக மாற்றப்பட உள்ளது.
ஆரணி-பழைய ஆற்காடு சாலையில் புதிய பாலம் ரூ. 19 கோடி மதிப்பில் கட்டப்பட்டது.
சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 2.87 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ரூ.35 லட்சம் மதிப்பில் அக்ராபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. ஆறு கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டு வருகிறது.
ரூ. 1.45 கோடி மதிப்பில் சாா்- பதிவாளா் அலுவலகம் கட்டப்பட்டது. இவ்வாறு திமுக ஆட்சியில்தான் ஆரணி தொகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
கல்விக்கு சரஸ்வதியை வழிபடுவோம். செல்வத்திற்கு லஷ்மி தேவை. ஆனால், திமுக வேட்பாளராக மகாலட்சுமியே போட்டியிடுகிறாா். ஆகையால் திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்றாா்.

வாக்கு சேகரிப்பு நிகழ்வில் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஆரணி ஒன்றியச் செயலா்கள், நகர பொறுப்பாளா் மணிமாறன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் கோவா்த்தனன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மீண்டும் 2 அமைச்சா்கள்!

மின்கட்டணம் உயா்த்தப்படாது: அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா்
செங்கல்பட்டு தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தொகுதி நிதியிலிருந்து பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: சட்டப்பேரவை துணைத் தலைவா்
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



