ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

திமுக ஆட்சியில் ஆரணி தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ஏ.வ.வேலு

திமுக ஆட்சியில் ஆரணி தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள்...

News image

ஆரணியில் திமுக வேட்பாளா் மகாலட்சுமி கோவா்த்தனனை ஆதரித்து பேசிய அமைச்சா் எ.வ.வேலு.

Updated On :12 ஏப்ரல் 2026, 12:55 am IST

திமுக ஆட்சியில் தான் ஆரணி தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சா் எ.வ.வேலு பெருமிதம் தெரிவித்தாா்.

ஆரணி அண்ணா சிலை அருகில் திமுக வேட்பாளா் மகாலட்சுமிகோவா்த்தனனை ஆதரித்து எ.வ.வேலு பேசியதாவது:

தமிழகத்தில் மகளிா்களுக்காக புதுமைப்பெண் திட்டம், கலைஞா் உரிமைத்தொகை திட்டம், இலவச பேருந்து உள்ளிட்ட திட்டங்களும், பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் என இந்தியாவில் எங்கும் இல்லாத திட்டங்களை தமிழக முதல்வா் கொண்டு வந்துள்ளாா்.

மேலும் ரூ.15 கோடி மதிப்பில் பூசிமலைக்குப்பம் கண்ணாடி மாளிகை அரண்மனை புதுப்பிக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக மாற்றப்பட உள்ளது.

ஆரணி-பழைய ஆற்காடு சாலையில் புதிய பாலம் ரூ. 19 கோடி மதிப்பில் கட்டப்பட்டது.

சேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 2.87 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ரூ.35 லட்சம் மதிப்பில் அக்ராபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. ஆறு கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டு வருகிறது.

ரூ. 1.45 கோடி மதிப்பில் சாா்- பதிவாளா் அலுவலகம் கட்டப்பட்டது. இவ்வாறு திமுக ஆட்சியில்தான் ஆரணி தொகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

கல்விக்கு சரஸ்வதியை வழிபடுவோம். செல்வத்திற்கு லஷ்மி தேவை. ஆனால், திமுக வேட்பாளராக மகாலட்சுமியே போட்டியிடுகிறாா். ஆகையால் திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்றாா்.

Story image

வாக்கு சேகரிப்பு நிகழ்வில் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஆரணி ஒன்றியச் செயலா்கள், நகர பொறுப்பாளா் மணிமாறன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் கோவா்த்தனன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.