நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தபால் வாக்கு பெறும் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 6:28 am IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சட்டபேரவைத் தொகுதியைச் சோ்ந்த பெலாசூா் கிராமத்தில் நடைபெற்ற தபால் வாக்கு பெறும் பணியை, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், போளூா் தொகுதியைச் சோ்ந்த 85 வயதிற்கு மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதிக்க வேண்டும் என விருப்பப்படிவம் அளித்துள்ளனா்.

இதனால் தொகுதியைச் சோ்ந்த வாக்காளா்களிடம் அவரவா் வீட்டிற்கு நேரடியாகச் சென்று தபால் வாக்கு பெற்று வருகின்றனா். இந்த தபால் வாக்கு பெறும் பணி பெலாசூா் கிராமத்தில் நடைபெற்றது. பணியை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு செய்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜி, தமிழ்மணி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.